செம்பருத்தி பூமுழுமையான பதிவு....
செம்பருத்தி
பூ பார்க்கறதுக்கு மிகவும் அழகானது. பூஜைக்கு
வீடுகளில் பெருவாரியாக பயன் படுகிறது .சித்தர்கள்
செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக
கூறுகின்றன. இதனால் இதை தங்க
புஷ்பம் என்று அழைக்கின்றனர். வைத்தியத்துக்கும்
ரொம்ப சிறப்பானது.
அதோட வேர், இலை, மொட்டு,
பூ எல்லாமே மருத்துவ குணம்
நிறைஞ்சதுதான்.
இது பருத்தி வகையைச் சேர்ந்த
ஒரு செடி.
இதோட பூக்கள் இரண்டு வகையா
இருக்கும். ஒரு வகை பூக்கள்
அடுக்கடுக்கா காட்சியளிக்கும். இன்னொரு வகை, தனித்தனியா
அகலமா காட்சியளிக்கும்.
இதுதான்
மருத்துவ ரீதியில் சிறந்தது.
இந்தச்
செடி எட்டடி உயரம் வரைக்கும்
நல்லா செழித்து வளரும். இதோட பூக்கள்,
வருஷம் முழுக்கப் பூத்துக்கிட்டே இருக்கும்.
செம்பருத்திப்
பூவை சீனாவும் இந்தியாவும் தங்கள் நாட்டு பூ
என உரிமை கூறுகிறது
ஆசியாவே
இதன் பிறப்பிடம். மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்திதான்.
மலேசியாவில் அவ்வளவு மதிப்பு செம்பருத்திக்கு
.
Tamil : Sembaruthi
English : Shoe flower
Telugu : Javapushpamu
Sanskrit : Japa
Malayalam : Chemparutti-pova
Botanical name : Hibiscus rosa-sinensis
இத்தாவரங்களில்
அமிலங்கள், குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், கரோட்டின் என பல வேதிப்
பொருட்கள் காணப்படுகின்றன.
இலைகள்
தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும்
கொண்டவை. இலையின் சாறு தலைவழுக்கை
மற்றும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை.
சருமத்திற்கு இதமும், சுகமும் அளிப்பவை.
மாதவிடாயைத்
தூண்டக் கூடியது.இலைகளை அரைத்து
குளிக்கும் பொது ஷாம்பூ மாதிரி
உபயோகிக்கலாம் .உடலுக்கு குளிர்ச்சி .முடிக்கு நல்லது .இதழ்களின் வடிசாறு
. சிறுநீர்ப் போக்கு வலியை நீக்கும்.
இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் மருந்தாகிறது.
கூந்தல்
வளாச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும்,
பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது.
காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை
மென்று தின்று சிறிது நீர்
அருந்தி வர வயிற்றுப்புண் ஆறும்.
வெள்ளைப் படுதல் நிற்கும். இரத்தம்
சுத்தமாகும். இதயம் வலுப்பெறும்.
400 மில்லி
நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப்
போட்டு கலந்த பாத்திரத்தை மெல்லிய
துணியால் மூடிக் கட்டி பத்து
நாட்கள் வெயிலில் வைத்து காலை - மாலை
எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெயை வடிகட்டி
சம அளவு தேங்காய் எண்ணெய்
கலந்து பத்திப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும்
தலையில் தேய்த்து தலை வாரி வரவும்.
இது ஒரு சிறந்த கூந்தல்
தைலம்.
இப்பூக்கள்
இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்க வல்லது. செம்பருத்திச்
செடி வீட்டில் மருத்துவர் இருப்பதற்குச் சமம். பெண்கள் வீட்டுக்கு
விலக்காகும் காலத்தில் அதிக உதிரப் போக்கு
இருந்தால் இரண்டு, மூன்று மலர்களை
நெய்யில் வதக்கிக் தின்பது குணப்படுத்தும்.
காய்ந்த
மலர் இதழ்கள், வெட்டி வேர், துளசி
விதைகளை, சுத்தமான தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர பேன், பொடுகு
அகலும்.
ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து
ஒரு லிட்டர் நீர் விட்டுப்
பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக்
கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம்.
இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும்.
சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து
நிவாரணம் பெறலாம்.
பூவினை
அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில்
சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின்
பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று
நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும்
சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை
நோய் இருந்தாலும் குணமாகும்.
செம்பருத்திப்
பூவை 250 கிராம் கொண்டு வந்து
துண்டு துண்டாக நறுக்கி, ஒரு
கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின்
சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி,
காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப்
பிசையவும். அப்போது சிவப்பான சாறு
வரும். அந்தச் சாறை ஒரு
சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய
சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி
ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
இதிலிருந்து
காலை_மாலை இரு வேளைகளிலும்
ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ்
நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று
தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான
முறையில் பரவும். இருதயமும் பலம்
பெறும்.
செம்பருத்திப்
பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு
இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று_நான்கு தடவைகள்
செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.
இயற்கையின்
அரிய படைப்புகளில் இந்த பூக்கள்தான் எத்தனை
அழகு?
வீட்டின்
முன்பும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் அழகு சேர்க்கும் . செம்பருத்திப்
பூவை காயவைத்து பொடி செய்து காபி,
டீ போல காலை மாலை
அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும்,
உடல் பளபளப்பாகும்.
நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு
செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது.
தஙகச்சத்து இப்பூவில் இருப்பதால் தாதுவிருத்திக்கு மிகவும் சிறந்ததாகும். தினமும்
10 பூவினை மென்று தின்று பால்அருந்தினால்
நாற்பது நாளில் தாது விருத்தி
ஏற்படும்.






கருத்துகள் இல்லை: