பாவத்திலேயே பெரிய பாவம் இந்த பாவம் தான் என்பது தெரியுமா

பாவத்திலேயே பெரிய பாவம் இந்த பாவம் தான் என்பது தெரியுமா
மனிதர் தங்கள் வாழ்நாளில் செய்யும் பாவம்,[7] செயல்வழிப் பாவம் என்று அழைக்கப்படுகிறது.

பாவம் நான்கு விதங்களில் செய்யப்படுகிறது. அவை,

தீமையானதைத் திட்டமிடும் சிந்தனை
பிறருடைய மனதைப் புண்படுத்தும் சொல்
பிறரைத் துன்பத்திற்கு ஆளாக்கும் செயல்
செய்ய வேண்டிய கடமையைப் புறக்கணித்தல்
செயல்வழிப் பாவம் பின்வரும் இரண்டு வகைகளில் அடங்கும். அவை,

அற்ப பாவம்: முழுமையான அறிவோ, விருப்பமோ இன்றி, கடவுளுடைய அன்புக்கு எதிராக செயல்படுவது அற்ப பாவம் ஆகும்.[8] இத்தகையப் பாவம் தொடர்ந்து செய்யப்படும்போது, அது சாவான பாவத்திற்கு வழிவகுக்கும்.
சாவான பாவம்: கடவுளுடைய கட்டளையை முழு அறிவுடனும், முழு விருப்பத்துடனும் மீறி, பெரியதொரு தீங்கைச் செய்து, அவரது அன்பை முறித்துக்கொள்வது சாவான பாவம் ஆகும்.
கொடிய பாவங்கள்[தொகு]
முதன்மை கட்டுரை: ஏழு கொடிய பாவங்கள்
தற்பெருமை - தன்னையே அனைவரையும் விட பெரியவராக கருதி ஆணவம் கொள்ளுதல்
சீற்றம் - அளவுக்கு மீறிய வகையில் எரிச்சலுடன் கோபம் அடைதல்
காம வெறி - சிற்றின்ப நாட்டங்களுக்கு அதிக இடம் கொடுத்தல்
பேராசை - உலகப் பொருட்களின் மீது அதிகமாக ஆசைப்படுதல்
பெருந்தீனி விரும்பல் - உணவுப் பண்டங்களில் அதிக ஆர்வம் காட்டுதல்
பொறாமை - பிறரிடம் இருப்பவற்றைக் கண்டு பொறாமை கொள்ளுதல்

சோம்பல் - கடவுளுக்குரிய செயல்களிலும், தங்கள் கடமையிலும் சோம்பேறித்தனமாக இருத்தல்

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.