மார்பக புற்றுநோய் கட்டியா எனக் கண்டறிவது எப்படி?
மார்பக புற்றுநோய் கட்டியா எனக் கண்டறிவது
எப்படி?
பெண்களுக்கு
ஏன் மார்பக புற்றுநோய் வருகிறது,
மார்பக புற்றுநோய் கட்டியா எனக் கண்டறிவது
எப்படி? என்பது பற்றி விரிவாக
அறிந்து கொள்ளலாம்.
பெண்களை
மிரட்டும் நோய்களில் உலகளவில் முதன்மையானது மார்பகப் புற்றுநோய்.
மார்பகப்
புற்றுநோய் ஏன் ஏற்படுகின்றது என்பதற்கு
தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை.
செல்களின்
ஏற்படக்கூடிய இயல்புக்கு மீறிய, அபரிமிதமான வளர்ச்சியையே
புற்றுநோய் என்கிறோம்.
பெண்கள்
மார்பகத்தில் கட்டி அல்லது மாற்றங்கள்
ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள
வேண்டும்.
மார்பகத்தில்
கட்டி உள்ளதா என்பதை மாதத்துக்கு
ஒரு முறையாவது சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
அறிகுறிகள்
:
மார்பகத்தில்
தொடர்ந்து வலி, அசௌகரிய உணர்வு
ஏற்படுதல்.
மார்பகத்தின்
அளவு, வடிவத்தில் திடீர் மாற்றம் ஏற்படுதல்.
மார்புக்காம்பு
அல்லது வெளிச்சதை பகுதி சிவந்து போகுதல்.
உட்பக்கமாக
இழுத்துக் கொள்ளுதல் அல்லது வீக்கமடைதல்.
சிலருக்கு
மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டாலும் வலி மட்டும் இருக்காது.
வலி இல்லையென்று அலட்சியமாக இருக்காமல், அறிகுறிகளில் ஒன்றிரண்டு தென்பட்டாலும் உடனே மருத்துவரிடம் செல்ல
வேண்டும்.
மருத்துவர்
மேமோகிராம், பயாப்ஸி உள்ளிட்ட சில
பரிசோதனைகளை செய்து அது புற்றுநோய்தானா
என்பதை உறுதி செய்வார்.






கருத்துகள் இல்லை: